முதியவர் சட்டைப்பையில் திடீரென வெடித்த செல்போன் - மள மளவென தீ பற்றியதால் அதிர்ச்சி

x

கேரள மாநிலம் திருச்சூரில் 70 வயது முதியவரின் சட்டைப் பையில் வைத்திருந்த செல்போன் வெடித்து தீப்பற்றி எரிந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சூர் பகுதியை சேர்ந்த எலியாஸ் என்ற 70 வயது முதியவர் தேநீர் கடையில் டீ குடிக்க வந்துள்ளார். அப்போது சட்டப் பையில் வைத்திருந்த செல்போன் வெடித்து தீ பற்றி எரிந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் செல்போனை சட்டைப்பையிலிருந்து வெளியே எடுத்து கீழே வீசினார். இதன் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. முதியவர் எலியாஸ் ஐ டெல் கம்பெனியின் செல்போனை வைத்திருந்ததாகவும் அதன் விலை ஆயிரம் ரூபாய் என்றும் தெரிவித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்