விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர்கள் மீது கொலை வழக்கு பதிவு? - காவல்நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்

x

மதுரை செல்லூர் காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மதுரை செல்லூர் போலீசார், இளைஞர்கள் சிலரை விசாரணை என கூறி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அவ்வாறு அழைத்து செல்லப்பட்டவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படுவதாக கூறி, அவர்களது குடும்பத்தினர் செல்லூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போலீசாரோடு வாக்குவாதம் செய்தனர். காவல் ஆய்வாளர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்