அதி வேகத்தில் வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுவன் மீது மோதிய சரக்கு வாகனம் - தாத்தா கண் முன்னே துடிதுடித்து பலியான பேரன்

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் பல்லவாடியில், ஜெயராமன் என்ற முதியவர் தன்னுடைய 2 வயது பேரன் ரிஷிதரனுடன் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, திருக்கோவிலூரை நோக்கி அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சிறுவன் மீது மோதியது . உடனடியாக படுகாயமடைந்த சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. தாத்தாவின் கண்முன்னே பேரன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், தப்பியோடிய லாரி ஓட்டுநர் சந்தன பாரதியை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்