"அய்யா நீங்க நெனச்சா என்ன காப்பாத்தலாம்" சிறுநீரகம், கல்லீரல் செயலிழந்த சிறுவன்-முதல்வருக்கு கோரிக்கை

x

விருதுநகர் பர்மா காலனியை சேர்ந்தவர் அப்துல் மஜித். இவரின் 14 வயது மகனான அஸாரூதினுக்கு ஒரு வயதிலிருந்தே அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து உள்ளது. இதனால் கடந்த சில ஆண்டுகளாகவே அசாருதீனுக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சிறுவனுக்கு தற்போது கல்லீரலும் பாதிக்கப்பட்டு உள்ளதால் உடனடியாக சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தாய் தந்தை இருவரும் கூலி வேலை செய்வதால் பல லட்சங்கள் செலவு செய்து தன்னுடைய மகனுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலையில் தற்போது அந்த சிறுவன் தமிழக முதல்வரிடம் உதவி கேட்டு பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் தங்களுடைய குழந்தையை காப்பாற்றித் தருமாறு அந்த சிறுவனின் பெற்றோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்