கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் அடித்து கொலை...கே. பாலகிருஷ்ணன் ஆறுதல்

x

அனைத்து கூர்நோக்கு இல்லத்தையும் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார்.

செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சிறுவன் கோகுல் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில், தாம்பரத்தில் உள்ள பெற்றோரை நேரில் சந்தித்து கே. பாலகிருஷ்ணன் ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறுவர்களை நல்வழிப்படுத்தவே சிறுவர் கூர்நோக்கு இல்லங்கள் உருவாக்கப்பட்டன என்றும் குற்றவியல் நடவடிக்கைகளுக்கு சிறுவர்கள் ஆளாகும் நிலையில், கூர்நோக்கு இல்லங்களில் உரிய பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், மருத்துவர்கள், உளவியல் நிபுணர்கள் பணியமர்த்த வேண்டும் என, கோரிக்கை விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்