இரு கார்களுக்கு இடையே சிக்கி சிறுவன் உயிரிழப்பு

x

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தனியார் மருத்துவமனையில், காரை பின்னோக்கி இயக்கியபோது, இரு கார்களுக்கிடையே சிக்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். செல்லியன்குட்டையை சேர்ந்த முத்துசாமியின் மகன்கள் தருண், தனீஷ், பாட்டியுடன் காரில் மருத்துவமனைக்கு சென்றனர். முத்துச்சாமியின் மைத்துனர் கனகராஜ் காரை ஓட்டினார். மருத்துவமனையில் 3 பேரையும் இறக்கிவிட்ட கனகராஜ், காரை திருப்ப பின்னோக்கி வேகமாக இயக்கினார். அப்போது பின்புறம் இருந்த தனீஷ் மற்றும் தருண் மீது மோதிய கார், பின்னால் நின்று கொண்டிருந்த மற்றொரு கார் மீது மோதி நின்றது. 2 கார்களுக்கு இடையே சிக்கிய சிறுவன் தனீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.


Next Story

மேலும் செய்திகள்