கொள்ளி வைக்கும் நொடியில் அசைந்த உடல்.. பேய் என தெறித்து ஓடிய உறவினர்கள் - மயானத்தில் திகில்

x

இறந்து விட்டதாகக் கருதப்பட்ட நபர் இறுதிச் சடங்கின் போது உயிருடன் வந்ததால் உறவினர்கள் தலைதெறிக்க ஓடிய விநோத சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

மொரேனாவைச் சேர்ந்தவர் ஜீது பிரஜாபதி. இவர் நீண்ட காலமாக சிறுநீரகம் தொடர்பான பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் திடீரென அவர் மயங்கி விழவே, உறவினர்களும் அக்கம்பக்கத்தினரும் பிரஜாபதியின் நாசி மற்றும் வாயில் விரலை வைத்து உயிர் இருக்கிறதா என பரிசோதித்த போது உயிர் இருப்பதற்கான அறிகுறிகள் தெரியாததால் அவர் இறந்து விட்டதாக நினைத்து இறுதி சடங்கிற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்தனர். அவரது உடல் மயானத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், இறுதி சடங்கு நடைபெற்ற போது பிரஜாபதியின் உடலில் அசைவு தெரிந்துள்ளது. அதனால் அவரைப் பேய் என கருதிய உறவினர்கள் அதிர்ச்சியுற்று அங்கு இருந்து தலைதெறிக்க ஓடத் துவங்கினர். பிறகு கொஞ்சம் சுதாரித்து பிரஜாபதிக்கு உயிர் இருப்பதை அறிந்து அவர்கள் உடனடியாக மருத்துவரை அழைத்துள்ளனர். மயானத்திற்கு வந்து பிரஜாபதியை சோதித்த மருத்துவர் அவருக்கு இதயத்துடிப்பு இருப்பதை உறுதி செய்ததோடு மேல் சிகிச்சைக்காக குவாலியரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்