கடலில் தக தக என்று எரிந்த படகு... 30 லட்சம் ரூபாய் நாசம்... மர்ம நபரை தேடும் போலீஸ்

x

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே, பைபர் படகுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அனுமந்தை குப்பம் பகுதியை சேர்ந்த மதியழகன் என்பவர், கடலுக்கு சென்று மீன் பிடித்து விட்டு, 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான தனது படகை கரையில் நிறுத்தி வைத்தார். அடையாளம் தெரியாத நபர்கள், அதிகாலையில் படகுக்கு தீ வைத்த நிலையில், படகு முழுவதும் எரிந்து நாசமானது. இது குறித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்து மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்