பார்வையற்ற மூதாட்டிக்கு பட்டப்பகலில்.. இளைஞரால் நேர்ந்த கொடுமை.. கொந்தளித்த பொதுமக்கள்

x

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே, சாலையோரத்தில் அமர்ந்திருந்த பார்வையற்ற மூதாட்டியிடம், பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

வாலாஜாபேட்டை அருகே, பட்டப்பகலில், சாலையின் ஓரமாக யாசகம் செய்த பார்வையற்ற மூதாட்டியிடம், இளைஞர் ஒருவர் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது.

மேலும், அந்த இளைஞரை கைது செய்ய வேண்டுமென பொதுமக்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.

இந்த நிலையில், பார்வையற்ற மூதாட்டியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட கிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், அவர் போதையில் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்