வேகமாக வந்து குப்புற கவிழ்ந்த ஜீப் நூலிழையில் தப்பிய பைக் - பதறவைக்கும் காட்சி

x

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததால், சாலையில் சென்று கொண்டிருந்த ஜீப், திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

மேல்மருவத்தூர் அருகே உள்ள ராமாபுரம் மோகலவாடியைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர், தனது மனைவி மகன் மற்றும் மகளுடன் காரில், வேலூர் சென்று கொண்டிருந்தார்.

வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தில் சென்று கொண்டிருந்தபோது, குறுக்கே வந்த பைக் மீது மோதாமல் இருக்க, ஜீப்பை வேகமாக திருப்பியுள்ளார்.

அப்போது,சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஜீப்பில் இருந்தவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்