பாலத்திலிருந்து ஆற்றில் குதித்த 90 வயது மூதாட்டி... உயிருக்குப் போராடிய திக் திக் காட்சிகள்

x

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி பத்திரமாக மீட்கப்பட்டார்.

மயிலாடுதுறை மாவட்டம், முதலைமேடு திட்டு கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சலை. 90 வயது மூதாட்டியான இவர், குடும்ப பிரச்சினையால் கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தில் இருந்து கீழே குதித்துள்ளார்.

ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த மூதாட்டியை, அப்பகுதியை சேர்ந்த மீனவர் சேகர் மற்றும் ஆயதபடை காவலர் தனஜெயன் இருவரும் பத்திரமாக மீட்டு படகு மூலம் தரைக்கு கொண்டு வந்தனர்.

இதையடுத்து உறவினர்களிடம் மூதாட்டி பாதுகாப்பாக ஒப்படைத்தனர். மூதாட்டியை காப்பாற்றிய இருவரையும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்