மது அருந்திவிட்டு துன்புறுத்திய அம்மா அப்பா... நடு இரவில் ஓடி வந்த 9 வயது சிறுமி.. மதுரையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

x

மதுரையில், பெற்றோர் மது அருந்திவிட்டு துன்புறுத்தியதால் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த 9 வயது சிறுமி, குழந்தைகள் காப்பகத்தில் பத்திரமாக சேர்க்கப்பட்டார்.

மதுரை அவனியாபுரம் பெரியசாமி நகர் பகுதியை சேர்ந்த களஞ்சியம்-பாண்டியம்மாளுக்கு, 9 வயதில் பூமிகா என்ற மகள் உள்ளார். பெற்றோர் மது அருந்திவிட்டு இரவில் வீட்டைவிட்டு வெளியே விரட்டியதால் தெருவிலும், தோழி வீட்டிலும் தங்கி வந்த சிறுமி பூமிகா, அவனியாபுரம் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தார். இதையடுத்து, சிறுமியை மீட்டு உணவு, உடை, கல்வி அளிக்குமாறு வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாவட்ட சமூக நலத் துறைக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் குழந்தைகள் பாதுகாப்பு குழு நிர்வாகிகள், சிறுமி பூமிகாவை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.


Next Story

மேலும் செய்திகள்