"பொறுத்தது போதும் பொங்கி எழு" காவல் நிலையத்தில் தந்தை மீது புகார் அளித்த 9 வயது சிறுவன்

x

ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டம் இஸ்லாம் பேட்டை கிராமத்தை சேர்ந்த சுபானி - சுபாம்பி தம்பதியரின் 9 வயது மகன் ஒன்பது ரஹீம். இவர், காவல்நிலையத்திற்கு சென்று வாய்மொழியாக புகார் ஒன்றை அளித்தார். அதில், தன்னுடைய தந்தை தினமும் குடித்துவிட்டு வருவதாகவும், வீட்டில் தனது தாயை அடித்து துன்புறுத்துவதாகவும் கூறியுள்ளார். அடிக்க வேண்டாம் என்று தாய் கெஞ்சினாலும் விடாமல் அடிப்பதால், தனது தந்தை மீது நடவடிக்கை எடுக்குமாறு சிறுவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். உடனடியாக அவரது வீட்டிற்கு சென்ற எஸ்.ஐ., தாய் மற்றும் தந்தை இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று, சுபானியை கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்