குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 9 அடி நீள மலைப்பாம்பு

அணைக்கட்டு அருகே குடியிருப்புக்குள் புகுந்த 9 அடி நீள மலைப்பாம்பை, தீயணைப்புத்துறையினர் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். வேலூர் மாவட்டம் மலையடி ராஜபாளையம் கிராமத்தில், குடியிருப்பு பகுதிக்குள் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து வந்துள்ளது. அதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். விரைந்து வந்த அவர்கள், மலைப்பாம்பினை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அதனை காப்புகாட்டில் விடுவித்தனர். 

X

Thanthi TV
www.thanthitv.com