தண்ணீர் தொட்டியில் விழுந்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு

x

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே 4 வயது சிறுவன் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பூங்குளத்தை அடுத்த ஆலமரத்தூரை சேர்ந்த திருமலை - மகேஸ்வரி தம்பதியின் 4 வயது மகன் லிங்கராஜ். வீட்டின் வெளியே மூடாமல் இருந்த குடிநீர் தொட்டிக்குள் விழுந்து மூழ்கியுள்ளான். இதையடுத்து, மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்


Next Story

மேலும் செய்திகள்