குப்பை தொட்டியில் இறந்து கிடந்த 4 மாத சிசுதந்தையே வீசியது அம்பலம்.. கலங்க வைத்த காரணம்...

x

திருவல்லிக்கேணி சி.என்.கே சாலையில் உள்ள குப்பை தொட்டி அருகே, இறந் நிலையில், 4 மாத சிசு கீழே கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இறந்த சிசுவின் உடலை கைப்பற்றி ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் குழந்தையை வைத்திருந்த கைப்பையை வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தூக்கி வீசப்பட்ட சிசு கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவிதா மற்றும் தனுஷ் என்பவருடையது என தெரியவந்தது. இறந்த நிலையில் சிசு பிறந்ததால் மருத்துவர்கள் தனுஷிடம் வழங்கி இறுதி சடங்கு செய்யுமாறு கூறியதும், தனுஷ் கூலி வேலை செய்வதால் ஏழ்மை காரணமாக சிசுவை பையில் சுற்றி குப்பை தொட்டியில் வீசியதும் தெரியவந்தது. இதனையடுத்து உறவுகள் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினருடன் இணைந்து, போலீசார் சிசுவை அடக்கம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்