30 நாளில் முடிந்த '20 வயது' லவ் மேரேஜ்.. காவு வாங்கிய கணவனின் 'திருட்டு பூனை' - தாய் வீட்டை உதறியவரை பிணமாக்கிய புகுந்த வீடு

x

20 வயது கல்லூரி மாணவியை காதலித்து கரம் பிடித்த இளைஞர், திருமணமான 30 நாட்களுக்குள்ளே அவரை கொன்று விட்டு தற்கொலை என நாடகமாடியிருக்கிறார். இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

காதலர்களை சேர விடாமல் ஒரு கூட்டம் ஆணவக் கொலை என்ற பெயரில் கோர சம்பவங்களை அரங்கேற்றி வருவது ஒரு பக்கமென்றால்...

காதல் திருமணம் செய்தவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு பிரிந்து செல்வதும் மறுபக்கம் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது..

இப்படி 20 வயதே ஆன கல்லூரி மாணவன், உடன் படித்த மாணவியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணமான முப்பது நாட்களுக்குள்ளே அவர்களின் வாழ்க்கை கசந்து முறிந்து கொடூரத்தில் முடிந்திருக்கிறது...

கோவை மத்துவராயபுரம் பகுதியை சேர்ந்தவர் 20 வயதான இளம் பெண் ரமணி. இவர் அருகில் உள்ள கலைக் கல்லூரியில் படித்த போது, அதே கல்லூரியில் படித்த சஞ்சய் என்ற இளைஞருடன் ரமணிக்கு காதல் ஏற்பட்டுள்ளது...

இருவரும் ஒருவரையொருவரை காதலித்து வந்த நிலையில், கடந்த 6 ஆம் தேதி இரு வீட்டாரையும் எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர்...

இதற்கு பெண்ணின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இளைஞரின் வீட்டார் பச்சை கொடி காட்டியுள்ளனர். இதனால், இளைஞரின் வீட்டிலேயே தங்கி குடும்பம் நடத்தி வந்துள்ளார் இளம் பெண்...

காதலிக்கும் போது இருந்த இருவருக்குள்ளான பிணைப்பு, திருமண வாழ்க்கையில் நாளாக நாளாக தளர்ந்து கொண்டு வந்ததை ரமணி உணர ஆரம்பித்தார்...

இதற்கான காரணத்தை கண்டுபிடிக்க நினைத்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது...

கல்லூரியில் படிக்கும் வேறொரு மாணவியுடன் கணவரான சஞ்சய் பழகி வருவதும், அடிக்கடி அவருடன் போனில் பேசிக் கொண்டிருப்பதையும் அறிந்து வேதனையும், ஆத்திரமும் அடைந்திருக்கிறார்...

இது குறித்து கேட்ட போது இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறு கோர விபரீதத்தில் போய் முடிந்திருக்கிறது...

அந்த கல்லூரி மாணவியுடனான பழக்கம் குறித்து கேள்வி கேட்ட ரமணியை, சரமாரியாக தாக்கிய சஞ்சய், அவரை துப்பட்டாவால் நெறித்து கொலை செய்திருக்கிறார்...

அடுத்து என்ன செய்வதென தெரியாமல் நின்று கொண்டிருந்த மகனுக்கு அவருடைய பெற்றோர் துணை நின்று, கொலை சம்பவத்தை மறைக்க திட்டம் தீட்டியுள்ளனர்...

கீழே உயிரிழந்து கிடந்த மருமகளின் சடலத்தை தூக்கிக்கொண்டு கழிவறை சென்ற அவர்கள், மருமகளை நன்கு குளிப்பாட்டி உடை மாற்றி விட்டதோடு, வீட்டில் இருந்த சாணிபவுடர் கரைசலை அவருடைய வாயில் ஊற்றியுள்ளனர்...

அதன் பிறகு மருமகள் தற்கொலை செய்து கொண்டது போல் கூச்சலிட அக்கம்பக்கத்தினர் வந்த நிலையில், இளம் பெண்ணின் உடல் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டது...

இதில், தங்கள் மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், தங்கள் மகளை கொன்றது சஞ்சய் மற்றும் அவரது குடும்பத்தினர் தான் எனக்கூறி பகிரங்க குற்றச்சாட்டுடன் பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரர் போலீசில் புகாரளித்தனர்....

இதனடிப்படையில், சந்தேக மரணம் என வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், இளைஞர் சஞ்சயை அலேக்காக தூக்கி காவல்நிலையம் அழைத்து வந்தனர்...

போலீசாரின் கிடுக்குப்பிடி கேள்வியால் மிரண்டு போன அவர், ஒரு கட்டத்தில் தடுமாறி, மனைவியை கொன்றதும், அதன் பின்பு பெற்றோரின் உதவியுடன் அரங்கேற்றிய நாடகம் என அனைத்தையும் ஒப்புக்கொண்டுள்ளார்....

உடனே, சஞ்சய் மற்றும் அவரது தந்தை லட்சுமணன் மற்றும் தாய் பக்ருநிஷா ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார் மூவரையும் சிறையில் அடைத்தனர்...


Next Story

மேலும் செய்திகள்