14 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல்... வாக்குமூலத்தால் அதிர்ந்த போலீசார் - சென்னையில் பயங்கரம்

x

கோயம்பேடு பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியிடம், அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் போலீசார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்றும், இளைஞரை பழிவாங்கவே, தனது தாய் பொய் புகாரை அளித்ததாகவும் சிறுமி அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தார். அதனைத் தொடர்ந்து, உண்மையை கூறிய சிறுமிக்கு, அவரது தாயால் பாதிப்பு ஏற்படும் என்பதால், சிறுமியை மீட்டு அரசு காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர். இதனிடையே, சிறுமி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பொய் புகாரில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்