14 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து பலி..!

x

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே 14 வயது சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடையநல்லூர் அடுத்த துரைச்சாமிபுரம் தெருவை சேர்ந்தவர் 14 வயது சிறுவன் அபினேஷ். இவர் சம்பவத்தன்று வீட்டின் அருகேயுள்ள கிணற்றுக்கு நண்பர்களுடன் சென்ற நிலையில், நீச்சல் தெரியாததால் கிணற்றின் சுற்றுவட்ட சுவர் மீது அபினேஷ் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக கிணற்றினுள் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுவனின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்