குட்டையில் குளிக்க சென்ற 13 வயது சிறுவன்.. சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழப்பு - சீர்காழியில் சோகம்

x

சீர்காழியை அடுத்த கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நான்கு வழிச்சாலைக்காக சவுடு மண் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தோண்டப்பட்ட குழிகள் பணி முடிந்த பின்பு அப்படியே கைவிடப்பட்ட நிலையில், குழிகள் நீர்தேக்க குட்டையாக மாறிப்போயுள்ளது. குட்டையில் கிராமத்து இளைஞர்கள் குளித்து வந்த நிலையில், சம்பவத்தன்று ஏராம்பாளையம் கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் கெளதம், நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது, குட்டையின் ஆழமான பகுதியில் சிக்கிய கெளதம் திடீரென மாயமான நிலையில், உடன் வந்த சிறுவர்கள் பெரியவர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். குட்டையினுள் இறங்கி சிறுவனை தேடி ஆரம்பித்த கிராமமக்கள், கெளதமை சடலமாக மீட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுவனின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்