ரத்தப் புற்றுநோயால் துடிக்கும் 10 வயது சிறுமி - ரத்த கண்ணீர் வடிக்கும் பெற்றோர்

x

ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மகளை காப்பாற்ற உதவ வேண்டுமென முதல்வர் ஸ்டாலினுக்கு சென்னை தம்பதி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சென்னையை அடுத்த படப்பையைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரின் 10 வயது மகள் லயா ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் லயாவிற்கு வெளிநாட்டில் மேல்சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக 2 கோடி வரை செலவாகும் என்கிற நிலையில், இதுவரை சேமித்து வைத்திருந்த மொத்த பணத்தையும் லயாவின் சிகிச்சைக்காக செலவிட்டுள்ள முத்துப்பாண்டி - சித்ரா தம்பதியினர், தங்களது குழந்தையின் மேல்சிகிச்சைக்கு உதவ வேண்டுமென முதல்வர் ஸ்டாலினுக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலினை சந்திப்பதாக, சிம் செல்லை அணுகி, காத்திருந்ததாகவும் ஆனால் சந்திக்க முடியவில்லை எனவும் அத்தம்பதியினர் தெரிவித்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்