பலாத்காரம் செய்யப்பட்ட 9 சிறுமிகள் காப்பகத்திலிருந்து சுவர் ஏறி குதித்து தப்பியதால் பரபரப்பு

x

கேரளாவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 9 சிறுமிகள் காப்பகத்தில் இருந்து மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

கேரள மாநிலம் கோட்டயத்தில் தனியார் காப்பகம் ஒன்று இயங்கி வருகிறது. குழந்தைகள் நலக்குழுவின் கீழ் இயங்கி வரும் இந்த காப்பகத்தில் 12 சிறுமிகள் தங்க வைக்கப்பட்டுள்ளர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிகள் பலரும் இங்கே உள்ளனர். வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் பாதுகாப்பிற்காக அவர்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் காப்பகத்தில் இருந்த 9 சிறுமிகள் திடீரென மாயமானது அதர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் சுவர் ஏறிக் குதித்து தப்பிச் சென்றதும் உறுதியான நிலையில் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்