அமைச்சர் உதயநிதிக்கு 8ஆம் வகுப்புமாணவி கொடுத்த உருக்கமான மனு

x

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டைக்கு சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஜனதாபுரம் பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ரித்திகா என்பவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் மனு ஒன்றை அளித்தார். அதில், விபத்தில் சிக்கிய தனது தந்தைக்கு இரண்டு கால்களிலும் காயம் ஏற்பட்டு, வேலைக்கு செல்ல முடியாத நிலை இருப்பதாகவும், செவிலியர் படித்த தனது தாய்க்கு வேலை வழங்குமாறும் கோரிக்கை விடுத்தார். மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்