உயிரை கையில் பிடித்து ஓடிவந்த 86 பேர்...கடவுளாக வந்த கடலோர காவற்படை

ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவுகளுக்கு அகதிகளாக வந்த 86 பேரை கடலோர காவல்படையினர் மீட்டுள்ளனர். படகு ஒன்றில், 6 பெண்கள் உள்பட 86 பேர், கிரான் கனாரியா அருகே, 113 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தீவுகளுக்கு படகு ஒன்றில் அகதிகளாக வந்தனர். அவர்களை கண்டறிந்த ஸ்பெயின் கடலோர காவல்படையினர், 86 பேரையும் மீட்டு, ஆர்குனிகுயின் துறைமுகத்திற்கு அழுப்பி வைத்தனர். இந்த ஆண்டு, ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில், இதுவரை7 ஆயிரத்து 213 பேர் அகதிகளாக வந்துள்ளதாக ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது.

உயிரை கையில் பிடித்து ஓடிவந்த 86 பேர்கடவுளாக வந்த கடலோர காவற்படை

X

Thanthi TV
www.thanthitv.com