"திருமணமான 81 ஆயிரம் ஆண்கள் தற்கொலை" - உச்சநீதிமன்றத்தில் ஷாக் தகவல்

x

தேசிய ஆடவர் ஆணையத்தை அமைக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. வழக்குரைஞர் மகேஷ் குமார் திவாரி என்பவர், 2021-ஆம் ஆண்டில் திருமணமான ஆண்கள் 81 ஆயிரத்து 63 பேர் தற்கொலை செய்து கொண்டதாக, தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கை கூறுவதாக, மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் ஆண்களை கருத்திற்கொண்டு, தேசிய ஆடவர் ஆணையம் அமைக்க கோரிக்கை விடுத்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதி, ஒரு தரப்பு பிரச்னைகளை மட்டுமே சித்திரிக்கிறீர்களா? எனக் கேள்வி எழுப்பி மனுவை தள்ளுபடி செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்