கிராமத்திற்குள் 8 அடி நீள பாம்பு.. பீதியில் உறைந்த மக்கள்..

x

குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள ஒரு கிராமத்திற்குள் புகுந்த 8 அடி நீள மலைப்பாம்பு பத்திரமாக மீட்கப்ப்பட்டது. வர்சடா கிராமத்தில் மலைப்பாம்பு சுற்றித் திரிவதைக் கண்ட மக்கள் உடனடியாக வனத்துறைக்குத் தகவல் அளித்தனர். விரைந்து வந்த வனத்துறை ஊழியர்கள் மலைப்பாம்பை லாவகமாகப் பிடித்துச் சென்ற நிலையில், கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்