74 வது குடியரசு தின விழா கொண்டாட்டம்... அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி

x

குடியரசு தினத்தையொட்டி மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர் ஆர்.என். ரவி இன்று காலை 8 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி வைத்து, முப்படை வீரர்களின் அணிவகுப்பை ஏற்கிறார்.

குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சிகள் இன்று உழைப்பாளர் சிலைப்பகுதிக்கு அருகே மாற்றப்பட்டுள்ளது. இதனை ஒட்டி, இன்று பிற்பகல் வரை அண்ணா சதுக்கத்தில் உள்ள தலைவர்கள் நினைவிடத்திற்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை, 7.50 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலினும், அவரைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவியும் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நடைபெறும் இடத்துக்கு வருவார்கள். தொடர்ந்து, ஆளுநர் மற்றும் முதல்வருக்கு முப்படை தலைமை அதிகாரிகள், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் ஆகியோரை தலைமைச் செயலர் வெ.இறையன்பு அறிமுகம் செய்து வைப்பார். இதையடுத்து, ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைப்பார்.


Next Story

மேலும் செய்திகள்