10 நாளில் 71 போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டு கைது

x

தேனி உள்ளிட்ட மாவட்டங்களில், கடந்த 10 நாட்களில் 71 போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரளா, ஆந்திராவில் மருத்துவராக பயில்வதற்கான விதிகள் வேறாக இருப்பதால், சிலர் தமிழ்நாட்டு விதிகளுக்கு உட்படாமல் தேனி, திருவள்ளூர் உள்ளிட்ட எல்லை மாவட்டங்களில் மருத்துவராக பயில்வதாக புகார்கள் வந்துள்ளன. மாவட்ட சுகாதார இணை இயக்குநர்களுக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டு, காவல்துறை உதவியுடன் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, மருத்துவம் பயிலாமல், இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யாமல், மருத்துவத் தொழில் செய்து வருபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, தேனி உட்பட எல்லையோர மாவட்டங்களில் இதுவரை 71 போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்