சென்னையில் திருட முயன்றவரை அடித்தே கொன்ற சம்பவம் - 7 இன்ஜினியர்கள் கைது

x

சென்னை சைதாப்பேட்டையில் கட்டுமான பணியின் போது, திருடியதாக இருவரை அடித்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாண்டாண்டர் நகர் பகுதியில் கட்டுமான பணி நடைபெற்று கொண்டிருந்த 3 பேர் இரும்பு பொருட்களை எடுத்து கொண்டு தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால், அங்கிருந்த தொழிலாளர்கள் மற்றும் பொறியாளர்கள் 3 பேரையும் பிடிக்க முயன்றுள்ளனர். அதில், ஒருவர் தப்பி ஓடிட, இருவர் பிடிப்பட்டனர். ஷாயின்ஷா மற்றும் 16 வயது சிறுவனை பிடித்த பொறியாளர்கள் கம்பு மற்றும் கட்டையால் தாக்கியுள்ளனர். அதில் பகத்த காயமடைந்த சாயின்ஷா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ஏழு பொறியாளர்களையும், ஒரு தொழிலாளரையும் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்