பேருந்து மீது லாரி மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உடல் நசுங்கி பலி

x

ஆத்தூர் அருகே சாலையோரத்தில் நின்றுக் கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் தந்தை, மகன் உட்பட 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன் பாளையத்தை சேர்ந்த திருநாவுக்கரசு, சென்னையில் நடக்கும் பேத்தியின் மஞ்சள் நீராட்டு விழாவில் பங்கேற்பதற்காக குடும்பத்தினருடன் ஆம்னி பேருந்தில் புறப்பட்டார்.

சாலையோரமாக ஆம்னி பேருந்தை நிறுத்திவிட்டு, பேருந்தின் பின்பகுதியில் சீர்வரிசை பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி, பேருந்து மீது வேகமாக மோதியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்தில், திருநாவுக்கரசு, அவரது மகன் ரவிக்குமார், உறவினர்களான செந்தில்வேலன், சுப்ரமணி, ஆம்னி பேருந்து கிளீனர் தீபன் ஆகியோர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

திருநாவுக்கரசு மனைவி விஜயா மருத்துவமனை செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்த இருவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை ஏத்தாப்பூர் போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்