கடற்கரையில் 6 லட்சம் மதிப்பிலான காலணிகள் பதுக்கல் - கடத்தல்காரர்களுக்கு போலீசார் வலை

x

தனுஷ்கோடியில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்தி செல்ல கடற்கரையில் புதைத்து வைத்திருந்த 6 லட்ச மதிப்பிலான காலணிகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.


ராமேஸ்வரம் அடுத்த தனுக்கோடியில் கடல் வழியாக சிலர் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்த அதிகாரிகள், கடற்கரை மணற்பரப்பில் இரு மூடைகள் புதைத்து வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து, இரு மூடைகளையும் தோண்டி எடுத்த அதிகாரிகள், மூடையினுள் இருந்து சுமார் 6 லட்சம் மதிப்புள்ள காலணிகளை கைப்பற்றினர். தொடர்ந்து, சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கைப்பற்றப்பட்ட காலணிகள் இலங்கைக்கு கடல் வழியாக படகில் கடத்தப்பட இருந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில், இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்