ஒரே கல்லில் 55 அடி உயர பிரமாண்ட அனுமன் சிலை

x

கேரள மாநிலம் திருச்சூர் பூங்குன்னம் சீதாராமர் கோயிலில் 55 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட, மிகப்பெரிய அனுமன் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அங்கு, மிக உயரமான அனுமன் சிலை ஒன்றை அமைக்க கோயில் நிர்வாகிகள் முடிவு செய்தனர். இதற்காக, ஆந்திராவில் உள்ள நந்திகிராம் பகுதியில், அனுமன் சிலை அமைக்கும் கல் கிடைத்தது. ஒரே கல்லில், 55 அடி உயரத்தில் சிலை அமைக்கும் பணிகள் கடந்த 4 மாதங்களாக நடந்து வந்த நிலையில், அந்த பணி தற்போது முடிவடைந்ததையடுத்து அனுமன் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்


Next Story

மேலும் செய்திகள்