"மிட்டாய் வாங்கி கொடுத்து அத்துமீறினார்" 5 வயது சிறுமி அதிர்ச்சி வாக்குமூலம் - திமுக கவுன்சிலர் அதிரடி கைது

x

விருத்தாசலத்தில் 5 வயது சிறுமிக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் திமுக கவுன்சிலரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பகுதியில் தனியார் பள்ளியில் படித்து வரும் 5 வயது சிறுமி ஒருவர் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதில், சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதாக மருத்துவர் தெரிவித்தது பெற்றோரை அதிர்ச்சியடைய செய்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமி படிக்கும் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், பள்ளி தாளாளரும், விருத்தாச்சலம் 30 ஆவது வார்டு திமுக கவுன்சிலருமான பக்கிரிசாமி என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இதில், மிட்டாய் வாங்கி கொடுத்து தன்னிடம் பக்கிரிசாமி தவறாக நடந்து கொண்டதாக சிறுமி வாக்குமூலம் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, திமுகவின் கவுன்சிலரான பக்கிரிசாமி கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வாயிலாக தெரிவித்தார்...


Next Story

மேலும் செய்திகள்