தமிழகத்தில் சர்வதேச அளவிற்கு தரம் உயர்த்தப்படும் 5 ரயில் நிலையங்கள்

மயிலாடுதுறை - மைசூர் இடையே இயக்கப்படும் விரைவு ரயில், பாபநாசம் ரயில் நிலையத்தில் நின்று செல்வதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு, கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய எல்.முருகன், ரயில்வே தொடர்பாக தமிழகத்தில் இருந்து வரும் அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மத்திய அரசு மேற்கொள்வதாக கூறினார். தமிழகத்தில் ஆயிரத்து 900 கோடி ரூபாய் மதிப்பில் 5 ரயில் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட உள்ளதாகவும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com