பெண்ணை பழி வாங்க 5 பேர்.. 2 நாட்களாக கூட்டு பலாத்காரம் - சாக்கு மூட்டையில் கட்டி வீசிய கொடூரம்

x

காரில் கடத்தி சென்ற பெண்ணை இரு நாட்களாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, சாக்கு மூட்டையில் கட்டி வீசிய கொடூரம், தலைநகர் டெல்லியில் அரங்கேறியுள்ளது.

காசியாபாத் ஆசிரமம் சாலையில், சாக்குமூட்டையில் பெண் ஒருவர் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக அங்கு சென்ற போலீசார், அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் பரிசோதனையில், பாதிக்கப்பட்ட பெண் 2 நாட்களாக கூட்டு பாலியல் வன்கொடுமைக்கும், கொடூரமான சித்ரவதைக்கும் ஆளானது தெரிய வந்தது. போலீசாரின் விசாரணையில், நந்த் நகரை சேர்ந்த அந்த பெண்ணுக்கும், சிலருடன் சொத்து பிரச்சனை இருப்பது தெரிய வந்தது. அதனால், பழிவாங்கும் நோக்கத்துடன் கசியாபாத் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பெண்ணை, காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றுள்ளது. 2 நாட்களாக அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தியதுடன், சாக்கு மூட்டையில் கட்டி சாலையில் வீசியுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த தகவலின் படி 4பேரை போலீசார் கைது செய்தனர். அதில், ஒருவர் ஷாருக் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு போலீசாருக்கு மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நிர்பயாவுக்கு அரங்கேறிய கொடூரத்தை இந்த சம்பவம் மீண்டும் நினைவுப்படுத்துவதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்