5 பேர் 115 வழக்கு.. இன்ஸ்டாவில் சிக்கிய பலே கொலை கொள்ளையர்கள்

x

சிவகங்கை மாவட்டம் வாணி மற்றும் மெய்யனேந்தல் கிராமங்களில் நடைபெற்ற கொள்ளை சம்பவங்களில், சுமார் 67 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது. இந்த கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வந்த போலீசார், அவர்கள் அனைவரும் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு வைத்திருந்ததை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அவர்களது இன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக் செய்து, அதன்மூலம் அவர்கள் இருக்குமிடத்தை கண்டறிந்து பின்தொடர்ந்து சென்ற போலீசார், 5 கொள்ளையர்களையும் சென்னையில் வைத்து செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 57 பவுன் தங்க நகைகளும், இரண்டு இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஒவ்வொருவர் மீதும் சுமார் 23 கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்