பாஞ்சாகுள சிறுவர்களுக்கு 5 கிலோ தின்பண்டங்கள் பார்சல் - சேவையில் அனுப்பி வைப்பு
பாஞ்சாகுளத்தில் கடையில் தின்பண்டங்கள் மறுக்கப்பட்ட மாணவர்களுக்கு, மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் 5 கிலோ தின்பண்டங்களை அனுப்பியுள்ளனர். தென்காசி மாவட்டம் பாஞ்சாகுளத்திலுள்ள கடையில், பட்டியலின மாணவர்களுக்கு தின்பண்டங்கள் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டும், 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தின்பண்டம் மறுக்கப்பட்ட மாணவர்களுக்கு, முறுக்கு, மிக்சர் என 5 கிலோ தின்பண்டங்களை, மதுரை காந்தி நகர் தபால் நிலையத்திலிருந்து பார்சல் சேவை மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.
