புனித யாத்திரை நடத்திய யூதர்கள்..கடற்படை காவலர் உட்பட 5 பேர் பலி

x

டிஜெர்பாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கிரிபா ஜெப ஆலயத்தில் வருடாந்திர யூத புனித யாத்திரையின் போது, காவலுக்கு நின்றிருந்த காவலர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் மக்கள் அலறியடித்து ஓடினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு கடற்படை காவலர் உட்பட 5 பேர் பரிதாபமாக பலியாகினர். கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்