பட்டாசு வெடித்து தீ விபத்து... எரிவாயு சிலிண்டரும் வெடித்ததில் 5 வீடுகள் நாசம்

x

சென்னை எண்ணூரில், பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட தீ விபத்தில், எரிவாயு சிலிண்டரும் வெடித்து 5 வீடுகள் நாசமாயின.

அன்னை சிவகாமி நகரில் பட்டாசு வெடித்த போது, ஓட்டு வீட்டில் தீ பிடித்து, மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது.

பின்னர், எரிவாயு சிலிண்டரும் வெடித்து, அருகில் இருந்த வீடுகளுக்கும் தீ பரவியது.

உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் ஐந்து வீடுகள் தீக்கிரையாகின.


Next Story

மேலும் செய்திகள்