பள்ளிக் கட்டிட விபத்தில் 5 மாணவிகள் காயம்... டி.எஸ்.பி.யிடம் அ.தி.மு.க.வினர் மனு

x

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே, பள்ளிக் கட்டிட விபத்தில் அலட்சியத்துடன் செயல்பட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, டி.எஸ்.பி.யிடம் அ.தி.மு.க.வினர் மனு அளித்தனர். எட்டயபுரத்தில் செயல்பட்டு வரும் ராஜா அரசு உதவி பெறும் பள்ளியில், கடந்த 6ம் தேதி கழிவறை கட்டிட சுவர் இடிந்து விழுந்தது. இதில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதச் சென்ற 5 மாணவிகள் காயமடைந்தனர். பள்ளி நிர்வாகிகள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கக்கோரி, விளாத்திகுளம் முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன் தலைமையில் அதிமுகவினர், உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரனிடம் மனு அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்