ஹஜ் பயணத்துக்கு 4,200 பேர்.. ரூ.10 கோடி நிதி - தமிழக அரசின் புதிய முயற்சி

x

தமிழ்நாடு அரசின் முயற்சியால் இந்த ஆண்டு 4 ஆயிரத்து 200 பேர் ஹஜ் புனிதப் பயணம் செல்ல இருப்பதால் இஸ்லாமியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஹஜ் புனித யாத்திரைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு சென்னையில் இருந்து 4 ஆயிரத்து 200 பேர் புனித ஹஜ் பயணம் செல்ல இருக்கிறார்கள். அவர்களுக்கான புத்தாக்க பயிற்சி தஞ்சையில் நடைபெற்றது. அதில், ஹஜ் பயணத்தின்போது பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணத்திற்காக தமிழ்நாடு அரசு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்