41 மாணவர்கள் கொலை..பள்ளியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

x

உகாண்டாவில் பள்ளிக்கூடத்திற்குள் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 38 மாணவர்கள் உட்பட 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காங்கோ நாட்டை ஒட்டிய மேற்கு உகாண்டா எல்லைப் பகுதியான போன்ட்வியில் மேல்நிலைப் பள்ளிக்குள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் இணைந்துள்ள போராளி குழுவினர், இந்த தாக்குதலில் நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கும் நபர் ஒருவரை அப்பகுதி மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். ராணுவம் குவிக்கப்பட்டு, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்