தொடர்ந்து அத்துமீறிய பேராசிரியர்...புகார் அளித்த 41 மருத்துவ மாணவிகள் - நிர்வாகம் எடுத்த அதிரடி ஆக்சன்

x

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மயக்கவியல் துறை துணை பேராசிரியர் சையது தாகிர் உசேன். இவர் மீது மருத்துவ மாணவிகள் பலரும் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாகா கமிட்டி வாயிலாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில் பேராசிரியர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டது. 41 மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் பேராசிரியரை சஸ்பெண்ட் செய்துள்ளதாக மருத்துவமனை டீன் ரத்தினவேல் தெரிவித்துள்ளார். ஆபரேஷன் தியேட்டர்களில் தொடர்ச்சியாக பேராசிரியர் அத்துமீறி வந்தது உறுதி செய்யப்பட்டதாகவும், கடந்த 2017ல் இருந்தே இவர் மீது குற்றச்சாட்டுகள் இருந்ததும் தெரியவந்திருக்கிறது...


Next Story

மேலும் செய்திகள்