பள்ளிப் பேருந்தில் 4 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் - ஓட்டுநர் செயலால் அதிர்ச்சி

x

கேரளாவில் பள்ளி பேருந்தில் 4 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.


கேரளா மாநிலம் வளப்பட்டினத்தை சேர்ந்தவர் அசீம்.


பள்ளி பேருந்து ஓட்டுநரான இவர், பேருந்தினுள் வைத்து நான்கு வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.


இதில், சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதை கண்ட ஆசிரியர்கள் சிறுமியிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.


அப்போது, சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதை அறிந்த ஆசிரியர்கள் போலீசில் புகாரளித்துள்ளனர்.


இதன் அடிப்படையில் ஓட்டுநர் அசீமை போலீசார் கைது செய்தனர். மேலும், இதே போல் வகுப்பில் அசெளகரியமாக அமர்ந்திருந்த சிறுமி ஒருவரை மீட்டு ஆசிரியர்கள் விசாரித்துள்ளனர்.

அதில், தனது தந்தை தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக சிறுமி கூறியதை கேட்டு ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.


இது குறித்து சைல்டு லைனுக்கு புகார் கொடுக்கப்பட்ட நிலையில், சிறுமியின் தந்தையை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்