தேவாலயங்களில் பெண்களிடம் தங்கச் சங்கலி பறிப்பு - தமிழகத்தைச் சேர்ந்த 4 பெண்கள் கைது

x

கேரளாவில் உள்ள தேவாலயங்களில், கிறிஸ்தவ பெண்களிடம் தங்கச் சங்கலி திருட்டில் ஈடுபட்டு வந்த தமிழகத்தைச் சேர்ந்த 4 பெண்களை அம்மாநில போலீசார் கைது செய்தனர். கொச்சி அருகே கல்லூர் உள்ள தேவாலயத்தில், பெண் ஒருவரிடம் இருந்து நான்கரை சவரன் தங்கச் சங்கிலி திருடப்பட்டது. இதுதொடர்பான புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வைத்து, கடலூரைச் சேர்ந்த அனிதா, லட்சுமி, சந்தியா, அம்பிகா ஆகிய 4 பெண்களை கேரளா போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான விசாரணையில், கேரளாவில் வீடு வாடகைக்கு எடுத்து, சில நாட்கள் மட்டுமே அங்கு தங்கியிருந்து, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்