4 பழங்குடியின பெண்கள் பாலியல் வன்கொடுமை... கைதான இன்ஸ்பெக்டருக்கு திடீர் நெஞ்சு வலி

x

கள்ளக்குறிச்சியில் இருளர் இன பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட, போலீஸ் இஸ்பெக்டர் சீனிவாசனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கடந்த 2011-ம் ஆண்டு இருளர் பெண்கள் 4 பேரை போலீசார் பலாத்காரம் செய்தாக குற்றச்சாட்டு எழுந்த‌து. இந்த வழக்கில், விழுப்புரம் நீதிமன்றத்தில் சரண‌டைந்த காவல் ஆய்வாளர் சீனிவாசன், சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சிறையில் சீனிவாசனுக்குல நெஞ்சு வலி ஏற்பட்டதால் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்