வீட்டுக்கு செல்ல சொன்ன போலீசை தாக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் - ஆரணியில் அதிர்ச்சி

x

ஆரணி அருகே கண்ணமங்கலம் காவல் நிலைய போலீசார், கள்ளச்சாராய சோதனையில் ஈடுபட சென்றபோது, கண்ணமங்கலம் படவேடு சாலையில் 4 பேர் குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருந்தனர்.

தகராறில் ஈடுபட்டவர்களை, காவலர் அன்பழகன் என்பவர் தட்டிக் கேட்டு, வீட்டிற்கு செல்ல அறிவுறுத்தியுள்ளார்.

அப்போது காவலருக்கும் எதிர் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த 4 பேர், காவலர் அன்பழகனை சராமரியாக தாக்கினர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 4 பேரையும் கைது செய்து காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் ஐயப்பன், பழனி, முருகன் மற்றும் உறவினர் சரணவன் என தெரியவந்தது.

https://youtu.be/fqiU1Wz1BEMஅவர்கள் மீது 4 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்