செல்போன் கடைக்குள் புகுந்த 4 பேர்..போலீஸ் வெளியிட்ட அதிர்ச்சி காட்சி..பட்டுக்கோட்டை அருகே பரபரப்பு

x

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில், செல்போன் கடை உரிமையாளரை தாக்கும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளன. அறந்தாங்கி சாலை, காந்தி சிலை அருகே செல்போன் கடையை, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ரங்கசாமியின் மகன் கண்ணன் நடத்தி வருகிறார். இந்நிலையில், கண்டியன் தெருவை சேர்ந்த தயாநிதி, சிலம்பரசன் மற்றும் அவரது நண்பர்கள் சிலர், கடைக்கு வந்து கண்ணனை சரமாரியாக தாக்கியுள்ளனர். கண்ணன் மற்றும் தாக்குதல் நடத்திய நபர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. தாக்குதல் குறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்