தமிழகத்தில் 4 மிதக்கும் கப்பல் தளம். 'சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ச்சி..!'

x

தமிழ்நாட்டில் கூடுதலாக 4 கடலோர மிதவை இறங்கு தளங்களுக்கு மத்திய அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தியாவின் ஆன்மீக தலமான ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தம், வில்லூண்டி தீர்த்தம் ஆகிய இடங்களில் இவை அமைக்கப்பட உள்ளன. மேலும் கடலூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய சுற்றுலா பயணிகளை ஈர்க்க கூடிய இடங்களிலும் இந்த இறங்கு தளங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த மிதவை இறங்கு தளங்கள் சுற்றுலாப் பயணிகள் தடையின்றி பாதுகாப்பாகவும் போக்குவரத்தை மேற்கொள்ள பயன்படுத்தப்பட உள்ளது. கர்நாடகத்தில் மொத்தம் 11 மிதவை இறங்கு தளங்களை அமைக்க அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்