கடவுள் தேசத்திற்கு 4 நாட்கள் எச்சரிக்கை
கேரளாவில் மீண்டும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், 3 மாவட்டங்களில் சில பகுதிகளில் கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆலப்புழா, கோட்டயம், பத்தணம்திட்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் 4 நாட்களுக்கு கேரளாவில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் மற்றும் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story